Saturday, November 15, 2014

ஒரு பேய் கதை...


'என்னய்யா, இன்னைக்கு த்ரீ-பி கேம்ப்ல ஒரு ஆளுக்கு பேய் பிடிச்சிருச்சாம்' என்று கேட்டார் செல்வம் முருகனிடம்

செல்வம், முருகன், ரவி மூவரும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்பவர்கள். செல்வம் சைட் சூப்பர்வைசர், முருகன் ப்ரொக்யூர்மெண்ட் ஆஃபிஸர், ரவி சேஃப்டி ஆஃபிஸர். இவர்கள் மூன்று பேரும் ஒரே ஃப்ளாட்டில்தான் தங்கியுள்ளார்கள். இவர்களது குடும்பத்தினரோ இந்தியாவில் உள்ளனர்.

'ஆமாய்யா, என்னைக்கு அந்த தெலுங்குப் பையன் தூக்குப் போட்டு செத்தானோ. அன்னைல இருந்து அந்த கேம்புல ஏதாவது இப்படி ஒன்னு நடந்துட்டேதான் இருக்கு'

'அந்த ஆளு ஹிந்திக்காரன். ஆனா தெலுங்கு அவ்வளவு அலகா பேசரானாம். சைட்ல ஆளுங்க சொன்னாங்க'

'அப்படித்தான் சொல்றாங்க. பூஜையெல்லாம் பண்ணுவாரே அந்த சேட்டன்கிட்ட கொண்டுபோன பெறகுதான் இப்ப பரவாயில்லையாம். நாளைக்கு ஊருக்கு அனுப்பறாங்கலாம்'

'இங்க பாருய்யா, நாமெல்லாம் எதோ முட்டாக்****** மாதிரி இந்த ஆளு சிரிச்சிட்டு இருக்கறத' என்றார் செல்வம் ரவியைப் பார்த்தவாறே.

'ஏன்யா, என்ன வம்புக்கு இழுக்கறீங்க. எனக்கு இதுல எல்லாம் நம்பிக்க இல்ல அவ்வளவுதான்'

'உன்ன யாருய்யா இலுத்தா. இதெல்லாம் உனக்கு வந்தாத்தான் நீ நம்புவ' என்றார் செல்வம்..

'இது ஹேலுஸினேஷன். அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.'

ரவிக்கு சிறுவயதில் இருந்து இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.. கடவுள் நம்பிக்கையும் இல்லை.

'இந்த ம***ஸினேஷன் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஹிந்திக்காரன் தெலுங்கு பேசறது எல்லாம் எப்படியாம்?. சும்மா பெரிய பருப்பு மாதிரி பேசாதய்யா'

'யோவ். உன் கனவுல அஹ்மத் சாதி வந்தா எந்த மொழில பேசுவார்'

'அரபில'

'அது எப்படிய்யா. உனக்குத்தான் அரபி தெரியாதே, அப்புறம் எப்படி உன்னோட கனவுல வர்ற ஆள் அரபி பேசறார்'

'யோவ், நம்புன்னா நம்பு இல்லன்னா போ. கம்பெனி எதுக்கு அந்த ஆள ஊருக்கு அனுப்புதாம். நம்ம கம்பெனில உன்னத் தவிர எல்லாம் முட்டாப்****'கதான் ஒத்துக்கறேன்.'

'நான் நேருல பாக்காத வர எதையும் நம்பமாட்டேன்'

'யோவ், உனக்கு நேருல பேயப் பாக்கணுமா? இப்பவே கெளம்புயா. உனக்கு காமிக்கறேன்'

'சும்மா காமெடி பண்ணாதய்யா'

''முருகா, நீயும் கெளம்புய்யா கலீஃபா பார்க்குக்கு பின்னாடி உள்ள அந்த எடத்துக்கு இன்னைக்கு பன்னெண்டு மணிக்கு போறோம். இந்த ஆளு அப்பவாவது நம்பறானான்னு பாப்போம்'

'ஓகே. போலாம்... ஒரு பெட்... நீங்க சொல்றது உண்மைன்னா, இந்த மாசம் முழுசும் சரக்கு செலவு என்னோடது. இல்லன்னா, நீங்க ரெண்டு பேரும் எனக்கு சரக்கு வங்கித் தரணும்.'

மணி பதினொன்று, மூன்று பேரும் நடந்து அங்கு சென்றடைந்தபோது மணி பனிரெண்டை நெருங்கியது. பார்க் அருகில் நல்ல வெளிச்சம் இருந்தாலும். செல்வம் சொன்ன இடம் பார்க்கிற்கு வெளியே கொஞ்சம் ஒரு ஒதுக்குப்புறமான இடம். நல்ல இருட்டு. செடிகள் காடுபோல வளர்ந்திருந்தன. மொபைலில் இருந்த டார்ச்சைப் பயன்படுத்தி அந்த இடத்திற்கு அருகே நடந்து சென்றனர்.

அந்த இடத்தை நெருங்க, நெருங்க அழுகிய உடலின் மணம் வீசத் துவங்கியது.

முருகன் செல்வத்திடம், 'யோவ், வேண்டாம்ய்யா.. வா போயிறலாம். இந்த ஆளால நாம எதுக்கு சாகணும்' என்று சொல்லிக் கொண்டிருந்தபோது சற்று தொலைவில் பயங்கரமாக காற்று வீசுவதுபோல சத்தம். அதோடு யாரோ காய்ந்த இலைகளின்மீது ஓடிவருகின்ற சத்தம்.

அதைக் கேட்டவுடன் முருகனும் செல்வமும் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டனர். ஆனால் ரவி அசரவில்லை. அந்த இடத்தை நோக்கி தமது மொபைலில் இருந்த ஃப்ளாஷ் லைட்டை திருப்ப. யாரும் அங்கு இல்லை. ஆனால் இப்போது ஒரு குழந்தை அழும் சத்தமும் கேட்டது. சில வினாடிகளில் எல்லாம் அமைதியாகிவிட்டது. ரவிக்கு ஒன்றும் புரியவில்லை.

மேலும், அரைமணிநேரம் அந்த இடத்திலேயே இருந்தார். ஆனால் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. வீட்டிற்கு திரும்பிய ரவியிடம், செல்வமும் முருகனும்,'இப்பவாவது நம்புறியா, சரக்கு வாங்கித் தரியா' என்று விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ரவி அவற்றை சட்டை செய்யாமல் அந்த சத்தத்தைப் பற்றியே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தார். ரவியால் அன்று இரவு தூங்கவே முடியவில்லை.

காலையில் நல்ல தலைவலி என்பதால் வேலைக்கு வரவில்லை என்று ரவி சொல்லிவிட்டார். மதியம்போல் மீண்டும் கிளம்பி அந்த இடத்திற்கு சென்றார். செக்யூரிட்டி அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ரவி வேறு வழியில்லாமல் அன்று இரவு மீண்டும் செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டு திரும்பினார்.

'வாங்கய்யா இன்னைக்கும் போய் பாப்போம். அந்த மர்மத்தை கண்டுபிடிச்சிரலாம்' என்றார்.

'யோவ், மூடிட்டு தூங்கு. அசிங்க அசிங்கமா வாய்ல வருது. உனக்கு வேணும்னா குடும்பத்துமேல அக்கறை இல்லாம இருக்கலாம். எங்களுக்கு அப்படி இல்ல' என்றார் முருகன்.

இவர்களை அழைத்துப் பயன் இல்லை என்பதை உணர்ந்த ரவி தனியாக செல்ல முடிவு செய்தார். அன்றிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களாக அந்த இடத்திற்கு ரவி போய் கொண்டிருந்தார். ரவி இவர்களிடம் சரியாக பேசுவதில்லை. பித்து பிடித்ததுபோல் எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தார்.

அன்று வெள்ளிக்கிழமை. ரவியிடம் முருகன், 'யோவ், என்ன ஆச்சுய்யா, உனக்கு. ஏன்யா இப்படி இருக்கற. உனக்கு பைத்தியமா. உன் புள்ள குட்டிகள நெனச்சாவது பேசாம இருய்யா' என்றார்.

'கவலைப்படாத. இன்னைக்கோட இதுக்கு ஒரு முடிவு கட்டிருவேன்'

செல்வத்திற்கும், முருகனிற்கும் ரவியை நினைத்து கவலை அதிகம் ஆனதால் த்ரீ-பி கேம்பில் இருந்த சங்கரன் நம்பூதிரியை பார்க்க சென்றார்கள்.

நம்பூதிரியின் அறையில் வேறு யாருமில்லை. பொதுவாக லேபர் கேம்பில் ஒரு அறையில் ஆறிலிருந்து பத்து பேர் வரை இருப்பார்கள்.

சந்தனக் கலரில் வேஷ்டி கட்டியிருந்த நம்பூதிரி, சட்டை எதுவும் அணியவில்லை. கழுத்தில் ருத்ராட்ச மாலை, தோளில் ஒரு துண்டு.

'எந்தா...' என்றார் கர்ஜனையான குரலில்

'சேட்டா, எங்க ப்ரெண்ட். கொஞ்ச நாளா ராத்திரி பேய் இருக்கும் இடத்துக்கு போறார். மொத நாள் நாங்க எல்லாரும் போனோம். சத்தம் கேட்டு பயந்து ஓடி வந்துட்டோம். ஆனா அந்த ஆள் டெய்லி நைட் போறார். பித்து பிடிச்ச மாதிரி பேசறார்'

கீழே உட்காரச் சொல்வதுபோல் சைகை காண்பித்துவிட்டு, டேபிளில் இருந்து சோழிகள், வெற்றிலை, எலுமிச்சம்பழம், திருநீர் ஆகியவற்றை எடுத்துவந்து அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார்.

கண்களை முடியவாறே சில மந்திரங்களை சொல்லிக்கொண்டே இடையிடையே சோழிகளை உருட்டினார். சற்று நேரத்திற்குப் பிறகு 'கத்தாம்மா' என்று கத்தினார்.

'கத்தாம்மான்னா என்ன சேட்டா' என்றனர் செல்வமும் முருகனும்.

'ஹவுஸ் மெயிட்'

'புரியல சேட்டா'

'அரபி வீட்டில் ஒரு குட்டி மறிச்சு. அதினே கொன்னது ஈ கத்தாம்மாயானென்னு அவர் ஷம்ஷயிச்சு. அவர் அவசானம் ஆ பாவம் கத்தாம்மயெ கொன்னு'

'ஆமாம் சேட்டா. ஒரு கொலந்த அலுகற சத்தமும் கேட்டுச்சு. நாங்க திரும்ப ஓடி வந்தப்பதான் கொலந்த அலுதுச்சு' என்றார் செல்வம்.

'ஆ கத்தாம்மா விவாகம் கழிச்சில்லாயிருந்து. ந்ஜிங்கள்டே ஸுகூர்த்துமாயி அவள் இப்போழ் ப்ரணயத்திலா'

'அவனுக்கு குடும்பம் இருக்கு. அவனக் காப்பாத்துங்க.சேட்டா' என்றார் முருகன்

'எனிக்கு ஒன்னும் செய்யான் பட்டில்லா. எல்லாம் கழிஞ்சு. இன்னு அயாளினே அவடப் போகான் சம்மதிக்கருது. இன்னு போயில்லெங்கில் அயாளே ரக்ஷிக்கான் பட்டும். பக்ஷே அயாளே தடயுன்னது அத்ர எளுப்பம் அல்லா'

'சேட்டா, நாங்க இப்ப என்ன செய்யணும்' என்றார் முருகன்

'ஈ கயரினெ அயாள்டே கையில் கெட்டணும். பின்னே நாள ராவிலப் போயட்டு ஈ பஸ்மம் ஆ ஸ்தலத்தில் இடணும். ந்ஜிங்கள் அதில் சவுட்டான் பாடில்லா. பின்னே ஒரு கார்யம். அயாள் இன்னு ராத்திரி அவிடே போயெங்கில், ஒரு மணிக்கு முன்னே திருச்சு வன்னால் வாதில் தொறக்கருது '

திருநீரையும் அந்தக் கயிறையும் வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்தனர். ரவி நல்ல உறக்கத்தில் இருந்த ரவியின் கையில், கடவுளை வேண்டிக் கொண்டு அந்தக் கயிறைக் கட்டினார் செல்வம்.

'யோவ், இந்த ஆள் வீட்டுக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?. அவங்க சொன்னா இந்த ஆள் போகமாட்டார்' என்றார் முருகன்.

'இல்லையா. இந்த ஆள் அவங்க பேச்செல்லாம் கேக்கமாட்டான். அவங்கள ஏன் தேவையில்லாம பயப்படுத்தணும்'

அதற்குப் பிறகு டீயில் தூக்க மாத்திரைகளைக் கலக்கி அதை ரவியிடம் கொடுத்தனர். ரவி அதை வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் தூங்கிவிட்டார். சரியாக பதினோரு மணிக்கு அலாரம் அடிக்க, ரவி எழுந்துவிட்டார்.

'ரவி வேண்டாம்யா. உனக்காகத்தான் சொல்றோம். இன்னைக்கு மட்டும் போகவேண்டாம். நாளைக்கு போயிக்கோ' என்றார் செல்வம்.

'சும்மா, இருங்கய்யா.. நாளைக்கு எல்லாம் சரியாயிரும். வேணும்னா நீங்களும் வாங்க போலாம்' என்றார் ரவி.

அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ரவி சென்றார் டோரை அடைக்கும்போது கையிலிருந்த கயிறு டோர் ஹேண்டிலில் மாட்டி அருந்து விழுந்தது. அப்பொழுது அந்தக் கயிறைப் பார்த்த ரவி சிரித்தார்.

பனிரெண்டு மணிக்கு முன்னதாகவே அந்த இடத்திற்கு சென்றுவிட்டார். டேஞ்சர் என்று எழுதியிருந்த அந்த மேன்ஹோல் கவரை திறப்பதற்கு ஒரு கம்பியும் கொண்டு சென்றிருந்தார். மேன்ஹோல் கவரை மூடியிருந்த மண்ணை முந்தைய நாளே அப்புறப்படுத்தியிருந்தார். அவ்வளவு எளிதாக அந்த கவரை திறக்க முடியவில்லை. ஒருவழியாக பலம் கொடுத்து திறந்தார்.

மணி 12:55

அறையின கதவைத் தட்ட, செல்வமும் முருகனும் கதவைத் திறக்கவில்லை. ரவி எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை.
நான்கு மணிக்கு வெளியில் சென்று பார்த்தபோது, காரிடோரில் கிடந்த சோஃபாவில் கால்களை அகற்றி வைத்துக்கொண்டு நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். முடிகள் எல்லாம் களைந்து பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தார். அவர் கிடந்த காட்சியைப் பார்த்து பயந்த செல்வமும் முருகனும் ரூமிற்குள் சென்று கதவை அடைப்பதற்குள் ரவி வேகமாக எழுந்து வந்து கதவை தள்ளி ரூமிற்குள் நுழைந்தார்.

ரூமிற்குள் நுழைந்த ரவியைப் பார்த்து பயந்திருந்த செல்வத்தையும் முருகனையும் பெட்டில் தள்ளிவிட்டு, ரவி பேச ஆரம்பித்தார்.

'நான் அந்தப் பேயைப் புடிச்சிட்டேன். இதா இங்க இருக்குது' என்று சொல்லி அவரது ஃபோனைக் காண்பித்தார்.

அவர்கள் எதுவும் பேசாததால் ரவியே தொடர்ந்தார். 'அந்த சத்தம் வந்தது ஒரு அபாண்டண்ட் மேன்ஹோலில் இருந்து. அதுல இருந்த பம்ப்பில் டைமர் செட் செய்யப்பட்டிருந்துச்சு. அது ஒரு இரிகேஷன் பம்ப். ராத்திரி நேரங்களில், ரெசிடென்ஷியல் ஏரியாக்களில் தண்ணீர் அதிகமாக தேவை இருக்காது என்ற கான்செப்ட்ல, இந்த பம்ப் 12 மணிக்கு ஸ்டார்ட் ஆக செட் செஞ்சிருக்காங்க. அது மட்டுமில்லாம ரெண்டு பக்கமும் ஆட்டோமேடிக் கட் ஆஃப் சென்ஸாரும் இருக்கு. அதான் ஸ்டார்ட் ஆயி சில நொடிகளிலேயே அது ஆஃப் ஆகிவிடுகிறது. பார்க்கில் உள்ள தொட்டியை நிரப்ப இதைப் பயன்படுத்தி இருக்காங்க'
'
'இரிகேஷன் டிப்பார்ட்மெண்ட்ல இருக்கற என் ப்ரெண்ட் மூலமா பழைய நெட்வொர்க் லே-அவுட்டை நேத்தே வாங்கிப் பாத்துட்டேன். அப்பவே எனக்கு விஷயம் புரிஞ்சிருச்சு' வித்தியாசமான சத்தங்கள் எப்படி வருதுன்னு கண்டுபிடிக்கவே அந்த மேன்ஹோலை நைட் ஓபன் பண்ணுனேன்'

'இந்த பம்பை கழட்ட முடியாம, அப்படியே அங்க கெடந்த இலை தழைகளை அள்ளிப்போட்டு மூடிட்டு போயிருக்காங்க. அதுதான் அப்படி சத்தம். ரொம்ப நாளா லூப்ரிகன்ட் யூஸ் பண்ணாம இருக்கறதால, அதுல ஒரு பார்ட் ஒரசற சத்தம் கொழந்த அழுகற சத்தம் மாதிரி கேட்டுச்சு. நான் அதோட பவர் சப்ளையை கட் பண்ணிட்டேன். இனி அந்த பம்ப் வொர்க் ஆகாது. சத்தமும் இருக்காது'

'அப்படின்னா, அந்த வாசம்' என்றார் செல்வம்

'அது ராத்திரி மட்டும் இல்ல. பகல்லயும் இருக்கும். ஒரு மரத்துல இருந்து வர வாசம் அது , அந்த மரத்தோட பேர் கேலரி பியர்'

'நான் சொன்னா எல்லா விஷயத்தையும் என்னோட ஸ்மார்ட் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணியிருக்கேன். நீங்க பாத்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும்'

அந்த ஃபோனில் இருந்த வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்களைப் பார்த்தபோது ரவி சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு தெளிவாகின.

'உனக்கு ஏன்யா பேய் மேல நம்பிக்கை இல்லாமப் போச்சு' என்று கேட்டார் முருகன்.

'எப்படிப் பாத்தாலும் பேய் லாஜிக் எனக்கு சரியா தெரியல. ஒரு பேய் யாரையாவது கொன்னா அவங்க பேயா வந்து அந்தப் பேயை பழிவாங்க மாட்டாங்களா. அதுமட்டுமில்ல, மனுஷங்க மட்டும்தான் பேயா வரணுமா, ஏன் நாம டெய்லி சாப்படற கோழி, ஆடு இதெல்லாம் பேயா வந்து நம்மள பழி வாங்காதா?. கொசு, ஈ, எறும்பு இப்படி எத்தனையோ உயிர்களை நாம கொல்றோம்.'

'நீ சொல்றது உண்மதான்யா, நைட் இருட்டுல தனியா இருக்கும்போது யாருக்குமே கொஞ்சம் பயம் இருக்கும்யா' என்றார் செல்வம்.

'சரி, அத விடுங்க. அந்த தெலுங்குப் பையன் இறந்ததுல இருந்து த்ரீ-பி கேம்ப்ல ஒரு ப்ளாக்கே காலியா இருக்காம். கேம்ப் பாஸ் எனக்கு ஒரு ஆஃபர் குடுத்திருக்கார். அந்த ப்ளாக்ல நான் ஸ்டே பண்றதா இருந்தா, நம்ம ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் ஃப்ரீயா அங்க தங்கிக்கலாமாம், ஃபுட்டும் ஃப்ரீயாம்.'

'சரின்னு சொல்லிருப்பியே' என்றார் முருகன்.

'அந்தப் பையன் தூக்குப் போட்டு இறந்த ரூமிலேயே தங்கிக்கறேன்னு சொல்லிருக்கேன். வரீங்களா நீங்க?

பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா?

பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா?

//மு.கு: இந்தி நடிகர் வருண் ப்ருதி, சில வாரங்களுக்கு முன்பு "God Sent Me For You..." என்ற தலைப்பில் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா என்ற கேள்வியோடு ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்தபொழுது எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. அச்சம்பவம் இந்தக் காணொளியிலிருந்து சற்றே வேறுபட்டாலும், நல்ல நோக்கத்தில் அவர் செய்யும் இந்த செயலை விமர்சிக்கும் எண்ணத்தில் இதை எழுதவில்லை. //

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா வந்துவிட்டு அபு தாபி திரும்புவதற்கு முதல்நாள் சில பொருட்கள் வாங்குவதற்காக மாமாவுடன் (மாமனாருடன்) பொள்ளாச்சி சென்றிருந்தேன்.

பொதுவாக, இந்தியா சொல்பவர்களிடம் அங்கிருந்து வாங்கி வருவதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கும். மருந்து மாத்திரைகள், பாத்திரங்கள், பலகாரங்கள், இங்கு கிடைக்காத பலசரக்கு சாமான்கள் மற்றும் சில. பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாங்கிவிட்டாலும், ஊசிப் போகக்கூடியப் பொருட்களை மட்டும் முதல் நாள் வாங்குவது வழக்கம்.

கோட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் பத்ரகாளியம்மன் கோயில் வழியாக சென்று, மரப்பேட்டை பூங்காவிற்கும் சந்தைக்கும் இடையில் உள்ள ஒரு பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். கடைத்தெருக்களில் பார்கிங் செய்ய எனக்கு பயம் என்பதால் அங்கு காரை நிறுத்திவிட்டு நடந்து போவதுதான் வழக்கம்.

ந்யூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சூப் குடித்துவிட்டு கௌரி கிருஷ்ணா சென்று பலகாரங்கள் வாங்கினோம். பலகாரங்களை சிறிய சிறிய மஞ்சள் பைகளில் இட்டுத் தருவதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக அங்கேயே பிரித்து வாங்கிவிடுவோம்.

கௌரி கிருஷ்ணாவிலிருந்து கண்ணன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு நடந்தோம், கண்ணனில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தபோது, ஒரு முதியவர் "தம்பி, முறுக்கு வேணுங்களா" என்றார்.
அறுபத்தைந்து, எழுபது வயதிருக்கும். நல்ல உயரம், மெலிந்த உருவம். காலில் நீல நிறத்தில் ரப்பர் செருப்புகள். இடது தோளில் ஒரு துணிப்பை, வலது கையில் ஒரு பை.

"வேண்டாங்க அய்யா. இப்பத்தான் வாங்கிட்டு வந்தோம்"

"வீட்டுல செஞ்சதுங்க. ஒரு பாக்கெட் இருபது ரூவாதான்"

அந்த வயதிலும் உழைத்து வாழ்கிறாரே என்று எண்ணிய நான் மாமாவிடம், "மாமா, ஒரு பாக்கெட் வாங்கிக்கலாம்" என்றேன்.

மாமாவும் சரி என்று சொன்னாதால், "ஒரு பாக்கெட் குடுங்க" என்றோம்.

"தம்பி மூணு பாக்கெட் வாங்கிக்கோங்க. அம்பது ரூவாதான்" என்றார்.

"வேண்டாங்கய்யா, ஒரு பாக்கெட்டே அதிகம். நீங்க சொன்னதாலதான் வாங்குறோம்"

ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு நூறு ரூபாய் கொடுத்தேன். மீதிப் பணம் கொடுத்தவரிடம், "வேண்டாம் வெச்சுக்கோங்க" என்றேன்.

அவர் மறுத்துவிட்டு, பணத்தை திரும்பத் தந்தார்.

"வாங்கிக்கோங்க பெரியவரே, தம்பி ஆசையோட குடுக்கிறார் இல்ல" என்றார் மாமாவும். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

என்ன செய்வேதேன்று தெரியாமல். "சரி, பாக்கி பணத்துக்கும் முறுக்கு குடுங்க" என்றேன்.

"தம்பி இவ்வளவு வாங்கி என்ன பண்றது" என்றார் மாமா.

"விடுங்க மாமா, ஆஃபிஸுக்குக் கொண்டு போனா பத்து நிமிஷத்துல காலியாயிரும்"

ஏழு பாக்கெட் தந்த அந்த முதியவரிடம், "மூணு அம்பது ரூபான்னா, நூறு ரூபாய்க்கு ஆறு பாக்கெட் தானங்கய்யா" என்றேன்.

"இல்ல தம்பி, அம்பது ரூவாக்கு மூணு, நூறு ரூவாக்கு ஏலு" என்றார்

இன்னொரு நூறு ரூபாய் கொடுத்து, "இன்னும் ஏழு பாக்கெட் குடுங்க" என்றேன்.

அன்று முதல் அவரும் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர்...
**********
http://www.youtube.com/watch?v=GT4iEH9viCs