பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா?
//மு.கு: இந்தி நடிகர் வருண் ப்ருதி, சில வாரங்களுக்கு முன்பு "God Sent Me For You..." என்ற தலைப்பில் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா என்ற கேள்வியோடு ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்தபொழுது எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. அச்சம்பவம் இந்தக் காணொளியிலிருந்து சற்றே வேறுபட்டாலும், நல்ல நோக்கத்தில் அவர் செய்யும் இந்த செயலை விமர்சிக்கும் எண்ணத்தில் இதை எழுதவில்லை. //
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா வந்துவிட்டு அபு தாபி திரும்புவதற்கு முதல்நாள் சில பொருட்கள் வாங்குவதற்காக மாமாவுடன் (மாமனாருடன்) பொள்ளாச்சி சென்றிருந்தேன்.
பொதுவாக, இந்தியா சொல்பவர்களிடம் அங்கிருந்து வாங்கி வருவதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கும். மருந்து மாத்திரைகள், பாத்திரங்கள், பலகாரங்கள், இங்கு கிடைக்காத பலசரக்கு சாமான்கள் மற்றும் சில. பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாங்கிவிட்டாலும், ஊசிப் போகக்கூடியப் பொருட்களை மட்டும் முதல் நாள் வாங்குவது வழக்கம்.
கோட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் பத்ரகாளியம்மன் கோயில் வழியாக சென்று, மரப்பேட்டை பூங்காவிற்கும் சந்தைக்கும் இடையில் உள்ள ஒரு பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். கடைத்தெருக்களில் பார்கிங் செய்ய எனக்கு பயம் என்பதால் அங்கு காரை நிறுத்திவிட்டு நடந்து போவதுதான் வழக்கம்.
ந்யூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சூப் குடித்துவிட்டு கௌரி கிருஷ்ணா சென்று பலகாரங்கள் வாங்கினோம். பலகாரங்களை சிறிய சிறிய மஞ்சள் பைகளில் இட்டுத் தருவதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக அங்கேயே பிரித்து வாங்கிவிடுவோம்.
கௌரி கிருஷ்ணாவிலிருந்து கண்ணன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு நடந்தோம், கண்ணனில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தபோது, ஒரு முதியவர் "தம்பி, முறுக்கு வேணுங்களா" என்றார்.
அறுபத்தைந்து, எழுபது வயதிருக்கும். நல்ல உயரம், மெலிந்த உருவம். காலில் நீல நிறத்தில் ரப்பர் செருப்புகள். இடது தோளில் ஒரு துணிப்பை, வலது கையில் ஒரு பை.
"வேண்டாங்க அய்யா. இப்பத்தான் வாங்கிட்டு வந்தோம்"
"வீட்டுல செஞ்சதுங்க. ஒரு பாக்கெட் இருபது ரூவாதான்"
அந்த வயதிலும் உழைத்து வாழ்கிறாரே என்று எண்ணிய நான் மாமாவிடம், "மாமா, ஒரு பாக்கெட் வாங்கிக்கலாம்" என்றேன்.
மாமாவும் சரி என்று சொன்னாதால், "ஒரு பாக்கெட் குடுங்க" என்றோம்.
"தம்பி மூணு பாக்கெட் வாங்கிக்கோங்க. அம்பது ரூவாதான்" என்றார்.
"வேண்டாங்கய்யா, ஒரு பாக்கெட்டே அதிகம். நீங்க சொன்னதாலதான் வாங்குறோம்"
ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு நூறு ரூபாய் கொடுத்தேன். மீதிப் பணம் கொடுத்தவரிடம், "வேண்டாம் வெச்சுக்கோங்க" என்றேன்.
அவர் மறுத்துவிட்டு, பணத்தை திரும்பத் தந்தார்.
"வாங்கிக்கோங்க பெரியவரே, தம்பி ஆசையோட குடுக்கிறார் இல்ல" என்றார் மாமாவும். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
என்ன செய்வேதேன்று தெரியாமல். "சரி, பாக்கி பணத்துக்கும் முறுக்கு குடுங்க" என்றேன்.
"தம்பி இவ்வளவு வாங்கி என்ன பண்றது" என்றார் மாமா.
"விடுங்க மாமா, ஆஃபிஸுக்குக் கொண்டு போனா பத்து நிமிஷத்துல காலியாயிரும்"
ஏழு பாக்கெட் தந்த அந்த முதியவரிடம், "மூணு அம்பது ரூபான்னா, நூறு ரூபாய்க்கு ஆறு பாக்கெட் தானங்கய்யா" என்றேன்.
"இல்ல தம்பி, அம்பது ரூவாக்கு மூணு, நூறு ரூவாக்கு ஏலு" என்றார்
இன்னொரு நூறு ரூபாய் கொடுத்து, "இன்னும் ஏழு பாக்கெட் குடுங்க" என்றேன்.
அன்று முதல் அவரும் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர்...
**********
http://www.youtube.com/watch?v=GT4iEH9viCs
//மு.கு: இந்தி நடிகர் வருண் ப்ருதி, சில வாரங்களுக்கு முன்பு "God Sent Me For You..." என்ற தலைப்பில் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா என்ற கேள்வியோடு ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்தபொழுது எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. அச்சம்பவம் இந்தக் காணொளியிலிருந்து சற்றே வேறுபட்டாலும், நல்ல நோக்கத்தில் அவர் செய்யும் இந்த செயலை விமர்சிக்கும் எண்ணத்தில் இதை எழுதவில்லை. //
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா வந்துவிட்டு அபு தாபி திரும்புவதற்கு முதல்நாள் சில பொருட்கள் வாங்குவதற்காக மாமாவுடன் (மாமனாருடன்) பொள்ளாச்சி சென்றிருந்தேன்.
பொதுவாக, இந்தியா சொல்பவர்களிடம் அங்கிருந்து வாங்கி வருவதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கும். மருந்து மாத்திரைகள், பாத்திரங்கள், பலகாரங்கள், இங்கு கிடைக்காத பலசரக்கு சாமான்கள் மற்றும் சில. பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாங்கிவிட்டாலும், ஊசிப் போகக்கூடியப் பொருட்களை மட்டும் முதல் நாள் வாங்குவது வழக்கம்.
கோட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் பத்ரகாளியம்மன் கோயில் வழியாக சென்று, மரப்பேட்டை பூங்காவிற்கும் சந்தைக்கும் இடையில் உள்ள ஒரு பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். கடைத்தெருக்களில் பார்கிங் செய்ய எனக்கு பயம் என்பதால் அங்கு காரை நிறுத்திவிட்டு நடந்து போவதுதான் வழக்கம்.
ந்யூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சூப் குடித்துவிட்டு கௌரி கிருஷ்ணா சென்று பலகாரங்கள் வாங்கினோம். பலகாரங்களை சிறிய சிறிய மஞ்சள் பைகளில் இட்டுத் தருவதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக அங்கேயே பிரித்து வாங்கிவிடுவோம்.
கௌரி கிருஷ்ணாவிலிருந்து கண்ணன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு நடந்தோம், கண்ணனில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தபோது, ஒரு முதியவர் "தம்பி, முறுக்கு வேணுங்களா" என்றார்.
அறுபத்தைந்து, எழுபது வயதிருக்கும். நல்ல உயரம், மெலிந்த உருவம். காலில் நீல நிறத்தில் ரப்பர் செருப்புகள். இடது தோளில் ஒரு துணிப்பை, வலது கையில் ஒரு பை.
"வேண்டாங்க அய்யா. இப்பத்தான் வாங்கிட்டு வந்தோம்"
"வீட்டுல செஞ்சதுங்க. ஒரு பாக்கெட் இருபது ரூவாதான்"
அந்த வயதிலும் உழைத்து வாழ்கிறாரே என்று எண்ணிய நான் மாமாவிடம், "மாமா, ஒரு பாக்கெட் வாங்கிக்கலாம்" என்றேன்.
மாமாவும் சரி என்று சொன்னாதால், "ஒரு பாக்கெட் குடுங்க" என்றோம்.
"தம்பி மூணு பாக்கெட் வாங்கிக்கோங்க. அம்பது ரூவாதான்" என்றார்.
"வேண்டாங்கய்யா, ஒரு பாக்கெட்டே அதிகம். நீங்க சொன்னதாலதான் வாங்குறோம்"
ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு நூறு ரூபாய் கொடுத்தேன். மீதிப் பணம் கொடுத்தவரிடம், "வேண்டாம் வெச்சுக்கோங்க" என்றேன்.
அவர் மறுத்துவிட்டு, பணத்தை திரும்பத் தந்தார்.
"வாங்கிக்கோங்க பெரியவரே, தம்பி ஆசையோட குடுக்கிறார் இல்ல" என்றார் மாமாவும். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
என்ன செய்வேதேன்று தெரியாமல். "சரி, பாக்கி பணத்துக்கும் முறுக்கு குடுங்க" என்றேன்.
"தம்பி இவ்வளவு வாங்கி என்ன பண்றது" என்றார் மாமா.
"விடுங்க மாமா, ஆஃபிஸுக்குக் கொண்டு போனா பத்து நிமிஷத்துல காலியாயிரும்"
ஏழு பாக்கெட் தந்த அந்த முதியவரிடம், "மூணு அம்பது ரூபான்னா, நூறு ரூபாய்க்கு ஆறு பாக்கெட் தானங்கய்யா" என்றேன்.
"இல்ல தம்பி, அம்பது ரூவாக்கு மூணு, நூறு ரூவாக்கு ஏலு" என்றார்
இன்னொரு நூறு ரூபாய் கொடுத்து, "இன்னும் ஏழு பாக்கெட் குடுங்க" என்றேன்.
அன்று முதல் அவரும் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர்...
**********
http://www.youtube.com/watch?v=GT4iEH9viCs
No comments:
Post a Comment