இந்த எட்டு மாதத்தில் இதுதான் முதன்முறையாக தனியாக நடப்பது. மார்னிங்
ஷிப்ட் ஈவ்னிங் ஷிப்ட் என்று ஒவ்வொரு வாரமும் மாறிமாறி வருவதால், மார்னிங்
ஷிப்ட் உள்ளபோது மட்டும்தான் அவருடன் நடக்க வருவேன்.
அவர் தினமும் நடக்க செல்வார். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் க்யூஎ/க்யூசி மேனேஜராக வேலை செய்கிறார். பொதுவாக ஆறு மணிக்கெல்லாம் அவருக்கு வேலை முடிந்துவிடும். நாளை இந்தியா செல்வதால், இன்று சில வேலைகளை முடிக்கவேண்டிய கட்டாயம். எப்படியும் வீட்டிற்கு வர பத்து மணி ஆகிவிடும் என்றார்.
இந்தியா கொண்டு செல்லவேண்டிய பொருட்களை எல்லாம் ஏற்கனவே பேக் செய்துவிட்டோம். வேற வேலை ஒன்றும் இல்லாததால், தனியாக இருப்பதுபோல் ஒரு எண்ணம். நடக்கலாம் என்று முடிவோடு, நாங்கள் தங்கியிருந்த அல்-குவைர் ஏரியாவில் சுல்தான் காபூஸ் ஸ்ட்ரீட் ஓரத்தில் உள்ள நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
அம்மா தனியாக இருக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாலும், தனிமை என்பது எவ்வளவு பெரிய வேதனை என்பதை இன்றுதான் முழுவதுமாக உணரமுடிந்தது. எட்டு மாதங்களுக்கு முன் நாங்கள் ஒமான் வந்தபொழுது அம்மாவின் கண்களில் கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. பத்து வருடங்களுக்கு முன்பு அப்பா இறந்தபொழுதுதான் அம்மா கடைசியாக அப்படி அழுதது.
ஒமான் வந்தபிறகு, இந்த எட்டு மாதம் போனதே தெரியவில்லை. முதல் பத்து நாட்கள் அம்மாவின் நியாபகம் வந்திருந்தாலும், அதற்குப் பிறகு மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த்தில் லைசன்ஸ் வாங்க, வேலைக்கு அப்ளை செய்வது என்று பிசியாக இருந்ததால் அம்மாவின் தனிமையைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
அப்பா இறப்பதற்கு முன்னும், பின்னும் அம்மாதான் எனக்கு எல்லாம், என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட், ரோல் மாடெல், ஃபிளாஸஃபர் எல்லாமே அம்மாதான். எப்போதும் நமக்கு நல்லதே நினைக்கும் அம்மாவை பெஸ்ட் ஃப்ரெண்ட்டாக கிடைப்பது என்பது பாக்கியம்.
அப்பா இறந்த பிறகும் சொந்தக் காலில்தான் நிற்கவேண்டும் என்ற கொள்கையோடு இன்றுவரை வாழ்ந்து வருகிறார். அம்மாவின் குடும்ப சொத்துக்கள், அப்பாவின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிசிபி பேங்கில் சீனியர் மேனேஜராக இருக்கிறார்.
அம்மா மற்றவர்களுக்கு உதவி செய்வது யாருக்கும் தெரியாது. என்னிடம்கூட சொல்லமாட்டார். நன்றி கடிதங்கள் வரும்போதுதான், அம்மா உதவி செய்துள்ளது எனக்குத் தெரியும்.
போன வாரமே, அம்மாவிற்கு ஒரு சால்வையும், செயினும், ஐஃபோனும் வாங்கி வைத்துள்ளேன். அம்மாவிற்கு நான் என்ன வாங்கிக் கொடுத்தாலும் சந்தோசம்தான். அம்மாவை எங்களுடன் இங்கே வந்துவிடச் சொன்னோம். அம்மா மறுத்துவிட்டார்.
அம்மாவை இந்தமுறை எப்படியும் விஆர்எஸ் வாங்கிவிடச் சொல்லவேண்டும். திரும்பி வருவதற்கு முன், வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வைத்துவிட்டுத்தான் வரவேண்டும் என்ற முடிவோடு இருந்தேன்.
---
வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்துவிட்டோம். அந்த நேரத்தில் திருச்சிக்கு ஃப்ளைட் இல்லாததால், அவரது கம்பெனியின் சென்னை ப்ராஞ்ச் திருச்சி செல்ல கார் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய வீடு ஸ்ரீரங்கத்தில், எங்களது வீடு இருப்பதோ கேகே நகர். காலையில் அவர் வீட்டிற்கு சென்று மதியம்போல அம்மாவைப் பார்க்க செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
திருச்சி நெருங்கியபோது, அவர் டிரைவரிடம் கேகே நகர் செல்ல வழி சொன்னார்.
'அத்தையைப் பாத்துட்டு அப்புறமா வீட்டுக்கு போலாம்' என்றார்.
கண்ணீரை அடக்கமுடியாமல் சரி என்று தலையாட்டினேன்.
காலிங் பெல் அடித்தபோது, கதவை திறந்தது அம்மா இல்லை. ஒரு சிறுமி 'வாங்க சார், வாங்க அக்கா' என்று சொல்ல, சோஃபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மேலும் இரண்டு சிறுமிகள் ஓடிவந்து 'வாங்க' என்றனர் சந்தோஷத்தோடு.
'அம்மா, அக்காவும் சாரும் வந்துட்டாங்க' என்று அவர்கள் சத்தம்போட கிச்சனில் இருந்து வேகமாக ஹாலிற்கு வந்தார் அம்மா.
'வாங்க தம்பி, உக்காருங்க' என்று அம்மா சொல்லிமுடிப்பதற்குள் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
'இன்னைக்கு லீவ் எடுத்திருக்கேன். நானே மத்தியானம் வாக்குல ஸ்ரீரங்கம் வரலாம்ன்னு இருந்தேன் தம்பி' என்றார் அவரிடம்.
'இல்ல. அத்த உங்கள ஒரெட்டு பாத்துட்டு போயிருவோம்ன்னுதான்'
அதற்குள் 'அம்மா, யாரும்மா இவங்க?' என்றேன்
'நீங்க போய் ஒரு மாசத்துல, சின்னதா ஒரு குழந்தைகள் காப்பகம் நடத்த லைசன்ஸ் வாங்கிட்டேன். இப்ப மூணு பேர் இருக்காங்க. அடுத்த மாசம் இன்னும் மூணு பேர் வருவாங்க'
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
'போய், குளிச்சிட்டு வாங்க தம்பி. டிஃபன் செய்யறேன்' என்றார் அம்மா.
'வேண்டாம்மா, அங்க எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்காங்க. நான் குளிக்காம எதுவும் சாப்பிட மாட்டேன் இல்லியா. அவருக்கு மட்டும் டி போடுங்க. குடிச்சிட்டு கெளம்பறோம்' என்றேன்.
அம்மா டி போட கிச்சனுக்கு செல்ல, குழந்தைகளிடம் பேரைக் கேட்டேன்.
'உமா', 'ஜானகி', 'சத்யா" என்றனர் ஒவ்வொருவராக
'நான் யாருன்னு தெரியுமா?''
'கமலி அக்கா, வெளி நாட்டுல டாக்டரா இருக்கீங்க'
'ம்ம்ம்'
நாங்களும் படிச்சு உங்கள மாதிரியே டாக்டர் ஆயி, காசு இல்லாதவங்களுக்கு சும்மா மருந்து கொடுப்போம்'
அவர் தினமும் நடக்க செல்வார். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் க்யூஎ/க்யூசி மேனேஜராக வேலை செய்கிறார். பொதுவாக ஆறு மணிக்கெல்லாம் அவருக்கு வேலை முடிந்துவிடும். நாளை இந்தியா செல்வதால், இன்று சில வேலைகளை முடிக்கவேண்டிய கட்டாயம். எப்படியும் வீட்டிற்கு வர பத்து மணி ஆகிவிடும் என்றார்.
இந்தியா கொண்டு செல்லவேண்டிய பொருட்களை எல்லாம் ஏற்கனவே பேக் செய்துவிட்டோம். வேற வேலை ஒன்றும் இல்லாததால், தனியாக இருப்பதுபோல் ஒரு எண்ணம். நடக்கலாம் என்று முடிவோடு, நாங்கள் தங்கியிருந்த அல்-குவைர் ஏரியாவில் சுல்தான் காபூஸ் ஸ்ட்ரீட் ஓரத்தில் உள்ள நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
அம்மா தனியாக இருக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாலும், தனிமை என்பது எவ்வளவு பெரிய வேதனை என்பதை இன்றுதான் முழுவதுமாக உணரமுடிந்தது. எட்டு மாதங்களுக்கு முன் நாங்கள் ஒமான் வந்தபொழுது அம்மாவின் கண்களில் கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. பத்து வருடங்களுக்கு முன்பு அப்பா இறந்தபொழுதுதான் அம்மா கடைசியாக அப்படி அழுதது.
ஒமான் வந்தபிறகு, இந்த எட்டு மாதம் போனதே தெரியவில்லை. முதல் பத்து நாட்கள் அம்மாவின் நியாபகம் வந்திருந்தாலும், அதற்குப் பிறகு மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த்தில் லைசன்ஸ் வாங்க, வேலைக்கு அப்ளை செய்வது என்று பிசியாக இருந்ததால் அம்மாவின் தனிமையைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
அப்பா இறப்பதற்கு முன்னும், பின்னும் அம்மாதான் எனக்கு எல்லாம், என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட், ரோல் மாடெல், ஃபிளாஸஃபர் எல்லாமே அம்மாதான். எப்போதும் நமக்கு நல்லதே நினைக்கும் அம்மாவை பெஸ்ட் ஃப்ரெண்ட்டாக கிடைப்பது என்பது பாக்கியம்.
அப்பா இறந்த பிறகும் சொந்தக் காலில்தான் நிற்கவேண்டும் என்ற கொள்கையோடு இன்றுவரை வாழ்ந்து வருகிறார். அம்மாவின் குடும்ப சொத்துக்கள், அப்பாவின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிசிபி பேங்கில் சீனியர் மேனேஜராக இருக்கிறார்.
அம்மா மற்றவர்களுக்கு உதவி செய்வது யாருக்கும் தெரியாது. என்னிடம்கூட சொல்லமாட்டார். நன்றி கடிதங்கள் வரும்போதுதான், அம்மா உதவி செய்துள்ளது எனக்குத் தெரியும்.
போன வாரமே, அம்மாவிற்கு ஒரு சால்வையும், செயினும், ஐஃபோனும் வாங்கி வைத்துள்ளேன். அம்மாவிற்கு நான் என்ன வாங்கிக் கொடுத்தாலும் சந்தோசம்தான். அம்மாவை எங்களுடன் இங்கே வந்துவிடச் சொன்னோம். அம்மா மறுத்துவிட்டார்.
அம்மாவை இந்தமுறை எப்படியும் விஆர்எஸ் வாங்கிவிடச் சொல்லவேண்டும். திரும்பி வருவதற்கு முன், வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வைத்துவிட்டுத்தான் வரவேண்டும் என்ற முடிவோடு இருந்தேன்.
---
வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்துவிட்டோம். அந்த நேரத்தில் திருச்சிக்கு ஃப்ளைட் இல்லாததால், அவரது கம்பெனியின் சென்னை ப்ராஞ்ச் திருச்சி செல்ல கார் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய வீடு ஸ்ரீரங்கத்தில், எங்களது வீடு இருப்பதோ கேகே நகர். காலையில் அவர் வீட்டிற்கு சென்று மதியம்போல அம்மாவைப் பார்க்க செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
திருச்சி நெருங்கியபோது, அவர் டிரைவரிடம் கேகே நகர் செல்ல வழி சொன்னார்.
'அத்தையைப் பாத்துட்டு அப்புறமா வீட்டுக்கு போலாம்' என்றார்.
கண்ணீரை அடக்கமுடியாமல் சரி என்று தலையாட்டினேன்.
காலிங் பெல் அடித்தபோது, கதவை திறந்தது அம்மா இல்லை. ஒரு சிறுமி 'வாங்க சார், வாங்க அக்கா' என்று சொல்ல, சோஃபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மேலும் இரண்டு சிறுமிகள் ஓடிவந்து 'வாங்க' என்றனர் சந்தோஷத்தோடு.
'அம்மா, அக்காவும் சாரும் வந்துட்டாங்க' என்று அவர்கள் சத்தம்போட கிச்சனில் இருந்து வேகமாக ஹாலிற்கு வந்தார் அம்மா.
'வாங்க தம்பி, உக்காருங்க' என்று அம்மா சொல்லிமுடிப்பதற்குள் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
'இன்னைக்கு லீவ் எடுத்திருக்கேன். நானே மத்தியானம் வாக்குல ஸ்ரீரங்கம் வரலாம்ன்னு இருந்தேன் தம்பி' என்றார் அவரிடம்.
'இல்ல. அத்த உங்கள ஒரெட்டு பாத்துட்டு போயிருவோம்ன்னுதான்'
அதற்குள் 'அம்மா, யாரும்மா இவங்க?' என்றேன்
'நீங்க போய் ஒரு மாசத்துல, சின்னதா ஒரு குழந்தைகள் காப்பகம் நடத்த லைசன்ஸ் வாங்கிட்டேன். இப்ப மூணு பேர் இருக்காங்க. அடுத்த மாசம் இன்னும் மூணு பேர் வருவாங்க'
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
'போய், குளிச்சிட்டு வாங்க தம்பி. டிஃபன் செய்யறேன்' என்றார் அம்மா.
'வேண்டாம்மா, அங்க எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்காங்க. நான் குளிக்காம எதுவும் சாப்பிட மாட்டேன் இல்லியா. அவருக்கு மட்டும் டி போடுங்க. குடிச்சிட்டு கெளம்பறோம்' என்றேன்.
அம்மா டி போட கிச்சனுக்கு செல்ல, குழந்தைகளிடம் பேரைக் கேட்டேன்.
'உமா', 'ஜானகி', 'சத்யா" என்றனர் ஒவ்வொருவராக
'நான் யாருன்னு தெரியுமா?''
'கமலி அக்கா, வெளி நாட்டுல டாக்டரா இருக்கீங்க'
'ம்ம்ம்'
நாங்களும் படிச்சு உங்கள மாதிரியே டாக்டர் ஆயி, காசு இல்லாதவங்களுக்கு சும்மா மருந்து கொடுப்போம்'
No comments:
Post a Comment