அது ஒரு சனிக்கிழமை. வாரவிடுமுறைகளில் பெரும்பாலும் ஊருக்குப் போய்விடுவேன். அன்றும் ஊரில் தான் இருந்தேன்.
நண்பர்களுடன் வழக்கமான அரட்டை. அரட்டை என்பதைவிட யாரையாவது கிண்டல் செய்வதுதான் அதிகம். அன்று எங்களுக்குக் கிடைத்த பலியாடு விமல். ஒரு பெண்ணிடம் காதலை சரியாக சொல்லமுடியாமல் சொதப்பியதை சொல்லி அவனை ஆளாளுக்கு கிண்டல் செய்து கொண்டிருந்தோம்.
நான் கொஞ்சம் ஓவராக கிண்டல் செய்துவிட்டேன். அவனுக்கு கோபம் வந்து, 'நீ பெரிய இவனா?. நீ நல்லா வாய்லயே வடை சுடுவன்னு தெரியும். முடிஞ்சா ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்லு பாக்கலாம்' என்றான்.
'எனக்கு பொண்ணுககிட்ட வழியறதெல்லாம் புடிக்காது'
'புடிக்காது இல்ல. தைரியம் இல்லன்னு சொல்லு'
'எனக்கு தைரியம் இல்லியா.. பார்ரா.. சொல்லுடா எவகிட்ட சொல்லணும்னு, நான் இப்பவே சொல்றேன்'
இருந்திருந்த வாக்குல, சட்டுன்னு தூரத்துல நடந்து வந்துகொண்டிருந்த பெண்களை காண்பித்து, 'அதா அதுல ஒசரமா செவப்பா வருதே அதுகிட்ட போய் சொல்லு' என்றான்
எனக்கு பயத்தில் வயிறு கலக்க ஆரம்பித்தது. வெளியே காட்டாமல், அவர்கள் நடந்து வரும் திசையை நோக்கி வேகமாக நடந்து போனேன்.
உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. முன்னால் போய் நின்றபோது வாயிலிருந்து சத்தமே வரவில்லை. கொஞ்சமாக வெளிய வந்த சத்தத்தில், 'நில்லு' என்றேன் அவளைப் பார்த்து.
அவர்கள் நான்கு பேர் இருந்தனர். நாலு பேரும் அப்படியே நின்றனர்.
'எனக்கு உன்னப் புடிச்சிருக்கு. ஐ லவ் யூ' என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைக் கூட பார்க்காமல் ஓடிவந்து விட்டேன்.
'என்னது அண்ணனுக்கு இப்படி வேர்த்திருக்கு, இப்பத் தெரியுதா?. என்ன மணி எவ்வளவுன்னு கேட்டுட்டு வந்தியா?' என்றான் விமல்
'உன்ன மாதிரி பயந்தான்கொள்ளி இல்ல நான். நான் என்ன சொன்னேன்னு தைரியமிருந்தா அவகிட்டயே போய் கேட்டுக்க'
இப்படியே மாறிமாறி சண்டை போட்டு அன்றைய பொழுதைக் கழித்தோம்.
அந்தப் பெண் என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கும், வீட்டில் யாரிடமாவது சொல்லி இருக்குமா என்றெல்லாம் நான் நினைக்கவேயில்லை. என்னுடைய ஒரே நோக்கம் நண்பர்கள் முன்பு நான் தைரியமானவன் என்று நிரூபிக்கவேண்டும். 'உண்மையிலேயே அவனுக என்னை தைரியமானவன்னு நெனச்சிருப்பாங்களா, இல்லன்னா நான் பயந்தது அவனுகளுக்குப் புரிஞ்சிருக்குமா' இதுமாதிரியான சிந்தனைகள் மட்டுமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.
சில வாரங்களுக்குப் பிறகு தங்கச்சிகளுக்கு யூனிஃபார்ம் வாங்க தென்றல் சில்க்ஸிற்கு சென்றிருந்தோம். அங்கு அந்தப் பெண்ணை மீண்டும் பார்த்தேன். பார்த்ததுமே பயம் தொற்றிக் கொண்டது. அவங்க அப்பாகிட்ட சொல்லி, எங்க அப்பாட்ட வந்து சண்டைப் போட்டுருவாரோன்னு பயம்.
நான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணிற்கு என்னைப் பார்த்தவுடன் அடக்கமுடியாத சிரிப்பு. கூட வந்திருந்த பெண்ணிடம் என்னமோ காதில் சொல்ல, அந்தப் பெண்ணும் என்னைப் பார்த்து சிரித்தது.
கோமாளியாக்கிட்டாங்களேன்னு மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருந்தாலும் வெளிய காமிக்காம இருக்க ட்ரை பண்ணினேன்.
மூன்றாவது முறையாக அந்தப் பெண்ணைப் பார்த்தது கோட்டூர் பஸ் ஸ்டாண்டில். அங்குதான் முதன்முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்ததுவும்.
நல்ல மழை, எல்லோரும் வேகவேகமாக ஓடி கடைகளுக்கு முன்பு உள்ள கூரைகளுக்குள் போய் நின்றனர். நான் மட்டும் மழையை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பதைக் காண்பிக்கும் விதமாக மெதுவாக நடந்து போய் நின்றேன்.
என்னைப் பார்த்ததும் அந்தப் பெண்ணிற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தன தோழியிடம் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அடுத்து வந்த பஸ்ஸில் எல்லோரும் ஏறினர். மழையிலும் ஃபுட்போர்ட் அடித்து அந்தப் பெண்ணிற்கு என்னுடைய வீர தீரங்களை காண்பிக்க நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் அந்த பஸ்ஸில் ஏறவில்லை. நானும் இறங்கிவிட்டேன்
எங்க மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற தைரியத்தில் அந்தப் பெண்ணிடம், 'பேரென்ன?' என்றேன்.
'மெர்லின்'
'ம்ம்'
'உங்க பேர்'
'ப்ரவீண்'
'எந்த காலேஜ்''
'என் ஜி எம்ல, செகண்ட் இயர் பீ காம்.... நீங்'
'பீஎஸ்ஜி, ஃபைனல் இயர் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி'
'வீடு எங்க'
'என்.ஜி.ஜி.ஓ காலனி'
'நான் ரங்க சமுத்திரம்'
அதற்குள் பஸ் வந்துவிட்டது. அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக, ஃபுட்போர்ட்டில் நிக்காமல் உள்ளே சென்றேன்.
அடுத்த சில வாரங்கள் டைம் கீப்பர் வேலை பார்த்தேன். ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சிற்கு போற நேரம், சனிக் கிழமைகளில் காலேஜிற்கு போற நேரம் என்று எல்லாம் சரியாக நோட் பண்ணித் தொடர ஆரம்பித்தேன். நண்பர்களுக்கு இந்த விஷயத்தை சொல்லவில்லை. சக்ஸஸ் ஆனதற்குப் பிறகு சொல்லிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
அந்தப் பெண்ணை சந்திக்கப் போகும் முன், ஒவ்வொருமுறையும் பல நிமிடங்கள் கண்ணாடி முன் விரையம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தேன் //விஜய பாஸ்கர், நீங்க சொன்னது இது மாதிரி தானே//
சில சந்திப்புகளுக்குப் பிறகு மீண்டும் காதலை சொன்னேன்.
'என்னன்னு தெரியல, உன்னப் பாக்காம இருக்கமுடியல. வீட்டுலயும் சரி, காலேஜ்லயும் சரி எப்பவுமே உன் ஞாபகம் தான். எந்த ஹீரோயினப் பாத்தாலும் உன்ன மாதிரியே தெரியுது.எப்படி சொல்றதுன்னு தெரியல. எனக்கு நீ வேணும். கடைசிவர நாம ஒண்ணா வாழனும்'
'எனக்கும் உன்னப் புடிக்கும். நீ ரொம்ப நல்லவன். ஆனா நீங்க வேற மதம், நாங்க வேற மதம். அத நெனைக்கும்போதுதான் பயமா இருக்கு'
'இதெல்லாம் ஒரு விஷயமா?. நீ உனக்குப் புடிச்ச சாமிய கும்பிட்டுக்கோ. நான் எனக்குப் புடிச்ச சாமிய கும்பிட்டுக்கறேன்'
'நம்மளப் பத்தி சொல்லல. நம்ம குடும்பத்துல உள்ளவங்களப் பத்தித்தான் எனக்கு கவலை'
'அதப் பத்தி கவலைப்படாத, அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்'
அப்படியாக நாங்க காதலிக்க ஆரம்பித்தோம். இடையிடையே சில ஊடல்கள் வந்தாலும், ரெண்டு வருஷம் தொடர்ந்து காதலித்தோம்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு...
நான் மடத்துக்குளத்தில் ஒரு பேப்பர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். மெர்லின் வேலைக்கு ஒன்றும் செல்லவில்லை. அவங்க வீட்டில் வரன் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியிருந்தார்கள்.
இதற்கு மேலும், தள்ளிப்போட முடியாது என்பதால் வீட்டில் அப்பாவிடம் விஷயத்தை சொன்னேன். அப்பா, முடியாது என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.
'ஒன்னு பண்ணு, உன் தங்கச்சிக ரெண்டு பேரையும் மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திரு. அதுக்கு அப்புறம் நீ யார வேணும்னாலும் கட்டிக்கோ'
அம்மாவிடம் சொன்னேன். நான் என்ன சொன்னாலும் கேட்கும் அம்மாவும், இதில் எனக்கு ஆதரவாக இல்லை.
ஒருமுறை மெர்லினை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். வீட்டில் யாருமே சரியாக பேசவில்லை. தங்கச்சிகளுக்கு பேசவேண்டும் என்று ஆசை இருந்தாலும் பயந்துகொண்டு பேசவில்லை.
வீட்டிற்கு வந்த பிறகு மெர்லின் நம்பிக்கையை இழந்துவிட்டாள்.
'இனி நாம என்ன செய்யலாம்னு சொல்லு'
'கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம். எல்லாம் சரி ஆயிரும்'
'எவ்வளவு நாள்ன்னு சொல்லு. ஒரு மாசமா, ஒரு வருஷமா இல்ல பத்து வருஷமா'
'தங்கச்சிகள நெனச்சுத்தான் வீட்டுல பயப்படறாங்க'
'உன்னோட ரெண்டாவது தங்கச்சிக்கு கல்யாணம் ஆக இன்னும் கொறஞ்சது அஞ்சு வருஷம் ஆகும். அதுவரைக்கும் காத்து இருக்கணும்னு சொல்றியா'
'அப்படி இல்ல. வீட்டுல உள்ளவங்கள எதித்து ஒன்னும் பண்ணமுடியாது. அதான்'
'எங்க வீட்டுல எனக்கு ஒருவாரம் டைம் குடுத்திருக்காங்க. நேத்து வந்து பாத்திட்டுப் போன அந்த குடுமபத்தை எங்க அப்பா அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருச்சு. வர்ற வெள்ளிக்கிழமைக்குள்ள நான் அவங்களுக்கு பதில் சொல்லணும். அதுக்கு தகுந்த மாதிரி அவங்க மாப்பிள வீட்டுல சொல்லுவாங்க. மாப்பிள ரெண்டு மாசத்துல அமேரிக்கால இருந்து வர்றார். வந்தா உடனே கல்யாணம் வெச்சுக்கணும்னு சொல்றாங்க'
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. 'சரி, எனக்கு வியாழக்கிழமை வரை டைம் தா. அதுக்குள்ளே நான் ஒரு முடிவு சொல்றேன்' என்றேன்.
எப்படி யோசித்தாலும் என்னால் எங்க குடும்பத்தில் உள்ளவர்களை விட்டுவிட்டு கல்யாணம் செய்ய மனமில்லை. பலமுறை யோசித்த பிறகு வியாழக்கிழமை மெர்லினுக்கு ஃபோன் பண்ணினேன்.
'எனக்கென்னமோ, நீ அவரை கல்யாணம் பண்றதுதான் நல்லதுன்னு தோணுது'
'இதுக்குத்தான் ரெண்டு வருஷம் காதலிச்சோமா. நான் ஆரம்பத்துலயே சொல்லல. நீதான் சமாளிச்சுக்கலாம்னு சொன்ன. இப்ப எவ்வளவு ஈசியா சொல்ற'
'இல்ல, என்னோட சிச்சுவேஷனப் புரிஞ்சுக்கோ'
'ஒரு வார்த்த சொல்லு. நாளைக்கே நான் பெட்டி படுக்கையோட உங்க வீட்டுக்கு வந்துர்றேன்.'
'வேண்டாம், மெர்லி... நாம பிரிஞ்சிரலாம்'
ஒன்றும் பேசாமல் மெர்லின் ஃபோனை வைத்துவிட்டாள்.
ஒரு வாரம் நான் ஃபோன் பண்ணவே இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு ஃபோன் பண்ணினேன்.
'தயவு செஞ்சு இனி என்னக் கூப்பிடாத. நான் உன்ன மறந்துட்டேன். ரெண்டு நாளா அவர் என்கூட ஃபோன்ல பேசறார். உன்கூட இனி பேசுனா அது அவருக்கு செய்யற துரோகம் ஆய்விடும். ப்ளீஸ் இனி ஃபோன் பண்ணாத'
ஃபோனை வைத்துவிட்டு கதறி அழுதேன். என்னால் அந்த வார்த்தைகளை தாங்கமுடியவில்லை. அடுத்த பத்து நாட்கள் நரகமாக இருந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு மெர்லினின் ஃபோன் வந்தது. எடுக்கவில்லை. இருபத்தைந்து மிஸ்ஸுட் கால். எடுக்கவில்லை. கடையிசில் எடுத்தேன்.
'ஏன் ஃபோன் எடுக்கல?'
'நீ தான இனி உன்கூட பேசக் கூடாதுன்னு சொன்ன'
'ஆமா, அதுக்காக இத்தன தடவ கால் பண்ணியும் எடுக்கலியே. வேற எவளாவது கெடச்சுட்டாளா? அதான் மறந்துட்டியா?'
'இல்ல, மெர்லி.. என்னால உன்ன மறக்க முடியல. நான் வேற பொண்ண மனசுலகூட நெனச்சுப் பாக்கல. வாரத்துக்கு ஒரு தடவையாவது கால் பண்ணு ப்ளீஸ்'
'சீக்கரமே, ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் முடிச்சுக்கோ. எல்லாம் சரியாயிரும்.கல்யாணப் பத்திரிகை அடிக்க குடுத்தாச்சு. வந்தா அனுப்பி வைக்குறேன்' என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டாள்.
அதற்குப் பிறகு ஃபோன் வரவேயில்லை. எங்கு சென்றாலும் அவள் ஞாபகம் என்னைக் கொன்றது. ஊருக்கு சென்றால் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது, அந்த இடங்களில் நாங்கள் ஒன்றாக சுற்றியது ஞாபகம் வந்தது. வேலையில், யாரையாவது பார்க்கும்போது சென்றமுறை இவரைப் பார்த்தபோது நாங்க காதலிச்சிட்டு இருந்தோமே என்ற எண்ணம் வந்து மனது வலித்தது.
சோகத்தில் தாடி வளர்த்தாலும், தண்ணி அடிக்க மனம் வரவில்லை. இதுவரை தண்ணியடித்ததே இல்லை என்பதால் அதற்கு மனம் ஒத்துழைக்கவில்லை. சினிமாவிற்குப் போனேன், பாடல்கள் கேட்டேன், ஊர் சுற்றினேன். ஆனால் பலன் ஒன்றும் இல்லை. என்னால் அதை விட்டு வெளியே வரமுடியவில்லை.
அவருடைய பெயர் ஆல்வின் என்று சொல்லியிருந்தாள். ஊர் கோயம்பத்தூர். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் கோயம்பத்தூரில் ஒவ்வொரு இவேஞ்சலிக்கல் சர்ச் ஆகப் போய் விசாரித்தேன். அவர் மோசமானவர் என்று தெரிந்தால் மெர்லினை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் ஓடின. அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கடைசியில் கல்யாணத் தேதியை ஒரு நண்பன் மூலம் தெரிந்து கொண்டேன். கல்யாணத்திற்கு செல்கின்ற அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. ஆகையால் மடத்துக்குளத்திலே இருந்துவிட்டேன். கல்யாணத்திற்கு முதல்நாள் விமலிடம் இருந்து ஃபோன் வந்தது.
'மாப்பிள்ளையைப் பாத்தேண்டா. ஜாலியா பேசறார். சூப்பரா இருக்கார். இன்னைக்கு பொள்ளாச்சிலதான் தங்கியிருக்கிறார். சக்தி ஹோட்டல்ல'
அவனிடம் அதிகம் பேசாமல் ஃபோனை கட் பண்ணினேன்.
என்னைவிட அழகான நல்ல வசதியான மாப்பிளை கிடைத்ததால்தான் என்னைத் தூக்கி எரிந்திருக்கிறாள். இந்தப் பெண்களே இப்படித்தான். இதுல அவருக்கு துரோகம் பண்ண விருப்பம் இல்லியாம், என்கூட ஊர் சுத்தும்போது தெரியலியாம். ச்சீ நீ எல்லாம் பொம்பளையா. அவள் எனக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, அந்த அப்பாவியையும் ஏமாத்தப் போகிறாளே.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பைத் தாங்கமுடியாமல் பொள்ளாச்சிக்கு கிளம்பினேன்.
சக்தி ஹோட்டலில் ராத்திரி 12 மணிக்கு ஆல்வினை பார்த்துப் பேசினேன். நாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள், அவள் எனக்கு அனுப்பிய மெசேஜ்கள் எல்லாவற்றையும் அவரிடம் காண்பித்துவிட்டு கடைசியாக, 'சார், உங்க நல்ல மனசுக்கு இவளைவிட நல்ல பொண்ணு கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
ராத்திரியே மடத்துக்குளம் திரும்பப் போய்விட்டேன். அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினேன்.
நண்பர்களுடன் வழக்கமான அரட்டை. அரட்டை என்பதைவிட யாரையாவது கிண்டல் செய்வதுதான் அதிகம். அன்று எங்களுக்குக் கிடைத்த பலியாடு விமல். ஒரு பெண்ணிடம் காதலை சரியாக சொல்லமுடியாமல் சொதப்பியதை சொல்லி அவனை ஆளாளுக்கு கிண்டல் செய்து கொண்டிருந்தோம்.
நான் கொஞ்சம் ஓவராக கிண்டல் செய்துவிட்டேன். அவனுக்கு கோபம் வந்து, 'நீ பெரிய இவனா?. நீ நல்லா வாய்லயே வடை சுடுவன்னு தெரியும். முடிஞ்சா ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்லு பாக்கலாம்' என்றான்.
'எனக்கு பொண்ணுககிட்ட வழியறதெல்லாம் புடிக்காது'
'புடிக்காது இல்ல. தைரியம் இல்லன்னு சொல்லு'
'எனக்கு தைரியம் இல்லியா.. பார்ரா.. சொல்லுடா எவகிட்ட சொல்லணும்னு, நான் இப்பவே சொல்றேன்'
இருந்திருந்த வாக்குல, சட்டுன்னு தூரத்துல நடந்து வந்துகொண்டிருந்த பெண்களை காண்பித்து, 'அதா அதுல ஒசரமா செவப்பா வருதே அதுகிட்ட போய் சொல்லு' என்றான்
எனக்கு பயத்தில் வயிறு கலக்க ஆரம்பித்தது. வெளியே காட்டாமல், அவர்கள் நடந்து வரும் திசையை நோக்கி வேகமாக நடந்து போனேன்.
உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. முன்னால் போய் நின்றபோது வாயிலிருந்து சத்தமே வரவில்லை. கொஞ்சமாக வெளிய வந்த சத்தத்தில், 'நில்லு' என்றேன் அவளைப் பார்த்து.
அவர்கள் நான்கு பேர் இருந்தனர். நாலு பேரும் அப்படியே நின்றனர்.
'எனக்கு உன்னப் புடிச்சிருக்கு. ஐ லவ் யூ' என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைக் கூட பார்க்காமல் ஓடிவந்து விட்டேன்.
'என்னது அண்ணனுக்கு இப்படி வேர்த்திருக்கு, இப்பத் தெரியுதா?. என்ன மணி எவ்வளவுன்னு கேட்டுட்டு வந்தியா?' என்றான் விமல்
'உன்ன மாதிரி பயந்தான்கொள்ளி இல்ல நான். நான் என்ன சொன்னேன்னு தைரியமிருந்தா அவகிட்டயே போய் கேட்டுக்க'
இப்படியே மாறிமாறி சண்டை போட்டு அன்றைய பொழுதைக் கழித்தோம்.
அந்தப் பெண் என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கும், வீட்டில் யாரிடமாவது சொல்லி இருக்குமா என்றெல்லாம் நான் நினைக்கவேயில்லை. என்னுடைய ஒரே நோக்கம் நண்பர்கள் முன்பு நான் தைரியமானவன் என்று நிரூபிக்கவேண்டும். 'உண்மையிலேயே அவனுக என்னை தைரியமானவன்னு நெனச்சிருப்பாங்களா, இல்லன்னா நான் பயந்தது அவனுகளுக்குப் புரிஞ்சிருக்குமா' இதுமாதிரியான சிந்தனைகள் மட்டுமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.
சில வாரங்களுக்குப் பிறகு தங்கச்சிகளுக்கு யூனிஃபார்ம் வாங்க தென்றல் சில்க்ஸிற்கு சென்றிருந்தோம். அங்கு அந்தப் பெண்ணை மீண்டும் பார்த்தேன். பார்த்ததுமே பயம் தொற்றிக் கொண்டது. அவங்க அப்பாகிட்ட சொல்லி, எங்க அப்பாட்ட வந்து சண்டைப் போட்டுருவாரோன்னு பயம்.
நான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணிற்கு என்னைப் பார்த்தவுடன் அடக்கமுடியாத சிரிப்பு. கூட வந்திருந்த பெண்ணிடம் என்னமோ காதில் சொல்ல, அந்தப் பெண்ணும் என்னைப் பார்த்து சிரித்தது.
கோமாளியாக்கிட்டாங்களேன்னு மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருந்தாலும் வெளிய காமிக்காம இருக்க ட்ரை பண்ணினேன்.
மூன்றாவது முறையாக அந்தப் பெண்ணைப் பார்த்தது கோட்டூர் பஸ் ஸ்டாண்டில். அங்குதான் முதன்முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்ததுவும்.
நல்ல மழை, எல்லோரும் வேகவேகமாக ஓடி கடைகளுக்கு முன்பு உள்ள கூரைகளுக்குள் போய் நின்றனர். நான் மட்டும் மழையை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பதைக் காண்பிக்கும் விதமாக மெதுவாக நடந்து போய் நின்றேன்.
என்னைப் பார்த்ததும் அந்தப் பெண்ணிற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தன தோழியிடம் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அடுத்து வந்த பஸ்ஸில் எல்லோரும் ஏறினர். மழையிலும் ஃபுட்போர்ட் அடித்து அந்தப் பெண்ணிற்கு என்னுடைய வீர தீரங்களை காண்பிக்க நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் அந்த பஸ்ஸில் ஏறவில்லை. நானும் இறங்கிவிட்டேன்
எங்க மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற தைரியத்தில் அந்தப் பெண்ணிடம், 'பேரென்ன?' என்றேன்.
'மெர்லின்'
'ம்ம்'
'உங்க பேர்'
'ப்ரவீண்'
'எந்த காலேஜ்''
'என் ஜி எம்ல, செகண்ட் இயர் பீ காம்.... நீங்'
'பீஎஸ்ஜி, ஃபைனல் இயர் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி'
'வீடு எங்க'
'என்.ஜி.ஜி.ஓ காலனி'
'நான் ரங்க சமுத்திரம்'
அதற்குள் பஸ் வந்துவிட்டது. அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக, ஃபுட்போர்ட்டில் நிக்காமல் உள்ளே சென்றேன்.
அடுத்த சில வாரங்கள் டைம் கீப்பர் வேலை பார்த்தேன். ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சிற்கு போற நேரம், சனிக் கிழமைகளில் காலேஜிற்கு போற நேரம் என்று எல்லாம் சரியாக நோட் பண்ணித் தொடர ஆரம்பித்தேன். நண்பர்களுக்கு இந்த விஷயத்தை சொல்லவில்லை. சக்ஸஸ் ஆனதற்குப் பிறகு சொல்லிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
அந்தப் பெண்ணை சந்திக்கப் போகும் முன், ஒவ்வொருமுறையும் பல நிமிடங்கள் கண்ணாடி முன் விரையம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தேன் //விஜய பாஸ்கர், நீங்க சொன்னது இது மாதிரி தானே//
சில சந்திப்புகளுக்குப் பிறகு மீண்டும் காதலை சொன்னேன்.
'என்னன்னு தெரியல, உன்னப் பாக்காம இருக்கமுடியல. வீட்டுலயும் சரி, காலேஜ்லயும் சரி எப்பவுமே உன் ஞாபகம் தான். எந்த ஹீரோயினப் பாத்தாலும் உன்ன மாதிரியே தெரியுது.எப்படி சொல்றதுன்னு தெரியல. எனக்கு நீ வேணும். கடைசிவர நாம ஒண்ணா வாழனும்'
'எனக்கும் உன்னப் புடிக்கும். நீ ரொம்ப நல்லவன். ஆனா நீங்க வேற மதம், நாங்க வேற மதம். அத நெனைக்கும்போதுதான் பயமா இருக்கு'
'இதெல்லாம் ஒரு விஷயமா?. நீ உனக்குப் புடிச்ச சாமிய கும்பிட்டுக்கோ. நான் எனக்குப் புடிச்ச சாமிய கும்பிட்டுக்கறேன்'
'நம்மளப் பத்தி சொல்லல. நம்ம குடும்பத்துல உள்ளவங்களப் பத்தித்தான் எனக்கு கவலை'
'அதப் பத்தி கவலைப்படாத, அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்'
அப்படியாக நாங்க காதலிக்க ஆரம்பித்தோம். இடையிடையே சில ஊடல்கள் வந்தாலும், ரெண்டு வருஷம் தொடர்ந்து காதலித்தோம்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு...
நான் மடத்துக்குளத்தில் ஒரு பேப்பர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். மெர்லின் வேலைக்கு ஒன்றும் செல்லவில்லை. அவங்க வீட்டில் வரன் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியிருந்தார்கள்.
இதற்கு மேலும், தள்ளிப்போட முடியாது என்பதால் வீட்டில் அப்பாவிடம் விஷயத்தை சொன்னேன். அப்பா, முடியாது என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.
'ஒன்னு பண்ணு, உன் தங்கச்சிக ரெண்டு பேரையும் மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திரு. அதுக்கு அப்புறம் நீ யார வேணும்னாலும் கட்டிக்கோ'
அம்மாவிடம் சொன்னேன். நான் என்ன சொன்னாலும் கேட்கும் அம்மாவும், இதில் எனக்கு ஆதரவாக இல்லை.
ஒருமுறை மெர்லினை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். வீட்டில் யாருமே சரியாக பேசவில்லை. தங்கச்சிகளுக்கு பேசவேண்டும் என்று ஆசை இருந்தாலும் பயந்துகொண்டு பேசவில்லை.
வீட்டிற்கு வந்த பிறகு மெர்லின் நம்பிக்கையை இழந்துவிட்டாள்.
'இனி நாம என்ன செய்யலாம்னு சொல்லு'
'கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம். எல்லாம் சரி ஆயிரும்'
'எவ்வளவு நாள்ன்னு சொல்லு. ஒரு மாசமா, ஒரு வருஷமா இல்ல பத்து வருஷமா'
'தங்கச்சிகள நெனச்சுத்தான் வீட்டுல பயப்படறாங்க'
'உன்னோட ரெண்டாவது தங்கச்சிக்கு கல்யாணம் ஆக இன்னும் கொறஞ்சது அஞ்சு வருஷம் ஆகும். அதுவரைக்கும் காத்து இருக்கணும்னு சொல்றியா'
'அப்படி இல்ல. வீட்டுல உள்ளவங்கள எதித்து ஒன்னும் பண்ணமுடியாது. அதான்'
'எங்க வீட்டுல எனக்கு ஒருவாரம் டைம் குடுத்திருக்காங்க. நேத்து வந்து பாத்திட்டுப் போன அந்த குடுமபத்தை எங்க அப்பா அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருச்சு. வர்ற வெள்ளிக்கிழமைக்குள்ள நான் அவங்களுக்கு பதில் சொல்லணும். அதுக்கு தகுந்த மாதிரி அவங்க மாப்பிள வீட்டுல சொல்லுவாங்க. மாப்பிள ரெண்டு மாசத்துல அமேரிக்கால இருந்து வர்றார். வந்தா உடனே கல்யாணம் வெச்சுக்கணும்னு சொல்றாங்க'
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. 'சரி, எனக்கு வியாழக்கிழமை வரை டைம் தா. அதுக்குள்ளே நான் ஒரு முடிவு சொல்றேன்' என்றேன்.
எப்படி யோசித்தாலும் என்னால் எங்க குடும்பத்தில் உள்ளவர்களை விட்டுவிட்டு கல்யாணம் செய்ய மனமில்லை. பலமுறை யோசித்த பிறகு வியாழக்கிழமை மெர்லினுக்கு ஃபோன் பண்ணினேன்.
'எனக்கென்னமோ, நீ அவரை கல்யாணம் பண்றதுதான் நல்லதுன்னு தோணுது'
'இதுக்குத்தான் ரெண்டு வருஷம் காதலிச்சோமா. நான் ஆரம்பத்துலயே சொல்லல. நீதான் சமாளிச்சுக்கலாம்னு சொன்ன. இப்ப எவ்வளவு ஈசியா சொல்ற'
'இல்ல, என்னோட சிச்சுவேஷனப் புரிஞ்சுக்கோ'
'ஒரு வார்த்த சொல்லு. நாளைக்கே நான் பெட்டி படுக்கையோட உங்க வீட்டுக்கு வந்துர்றேன்.'
'வேண்டாம், மெர்லி... நாம பிரிஞ்சிரலாம்'
ஒன்றும் பேசாமல் மெர்லின் ஃபோனை வைத்துவிட்டாள்.
ஒரு வாரம் நான் ஃபோன் பண்ணவே இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு ஃபோன் பண்ணினேன்.
'தயவு செஞ்சு இனி என்னக் கூப்பிடாத. நான் உன்ன மறந்துட்டேன். ரெண்டு நாளா அவர் என்கூட ஃபோன்ல பேசறார். உன்கூட இனி பேசுனா அது அவருக்கு செய்யற துரோகம் ஆய்விடும். ப்ளீஸ் இனி ஃபோன் பண்ணாத'
ஃபோனை வைத்துவிட்டு கதறி அழுதேன். என்னால் அந்த வார்த்தைகளை தாங்கமுடியவில்லை. அடுத்த பத்து நாட்கள் நரகமாக இருந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு மெர்லினின் ஃபோன் வந்தது. எடுக்கவில்லை. இருபத்தைந்து மிஸ்ஸுட் கால். எடுக்கவில்லை. கடையிசில் எடுத்தேன்.
'ஏன் ஃபோன் எடுக்கல?'
'நீ தான இனி உன்கூட பேசக் கூடாதுன்னு சொன்ன'
'ஆமா, அதுக்காக இத்தன தடவ கால் பண்ணியும் எடுக்கலியே. வேற எவளாவது கெடச்சுட்டாளா? அதான் மறந்துட்டியா?'
'இல்ல, மெர்லி.. என்னால உன்ன மறக்க முடியல. நான் வேற பொண்ண மனசுலகூட நெனச்சுப் பாக்கல. வாரத்துக்கு ஒரு தடவையாவது கால் பண்ணு ப்ளீஸ்'
'சீக்கரமே, ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் முடிச்சுக்கோ. எல்லாம் சரியாயிரும்.கல்யாணப் பத்திரிகை அடிக்க குடுத்தாச்சு. வந்தா அனுப்பி வைக்குறேன்' என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டாள்.
அதற்குப் பிறகு ஃபோன் வரவேயில்லை. எங்கு சென்றாலும் அவள் ஞாபகம் என்னைக் கொன்றது. ஊருக்கு சென்றால் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது, அந்த இடங்களில் நாங்கள் ஒன்றாக சுற்றியது ஞாபகம் வந்தது. வேலையில், யாரையாவது பார்க்கும்போது சென்றமுறை இவரைப் பார்த்தபோது நாங்க காதலிச்சிட்டு இருந்தோமே என்ற எண்ணம் வந்து மனது வலித்தது.
சோகத்தில் தாடி வளர்த்தாலும், தண்ணி அடிக்க மனம் வரவில்லை. இதுவரை தண்ணியடித்ததே இல்லை என்பதால் அதற்கு மனம் ஒத்துழைக்கவில்லை. சினிமாவிற்குப் போனேன், பாடல்கள் கேட்டேன், ஊர் சுற்றினேன். ஆனால் பலன் ஒன்றும் இல்லை. என்னால் அதை விட்டு வெளியே வரமுடியவில்லை.
அவருடைய பெயர் ஆல்வின் என்று சொல்லியிருந்தாள். ஊர் கோயம்பத்தூர். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் கோயம்பத்தூரில் ஒவ்வொரு இவேஞ்சலிக்கல் சர்ச் ஆகப் போய் விசாரித்தேன். அவர் மோசமானவர் என்று தெரிந்தால் மெர்லினை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் ஓடின. அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கடைசியில் கல்யாணத் தேதியை ஒரு நண்பன் மூலம் தெரிந்து கொண்டேன். கல்யாணத்திற்கு செல்கின்ற அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. ஆகையால் மடத்துக்குளத்திலே இருந்துவிட்டேன். கல்யாணத்திற்கு முதல்நாள் விமலிடம் இருந்து ஃபோன் வந்தது.
'மாப்பிள்ளையைப் பாத்தேண்டா. ஜாலியா பேசறார். சூப்பரா இருக்கார். இன்னைக்கு பொள்ளாச்சிலதான் தங்கியிருக்கிறார். சக்தி ஹோட்டல்ல'
அவனிடம் அதிகம் பேசாமல் ஃபோனை கட் பண்ணினேன்.
என்னைவிட அழகான நல்ல வசதியான மாப்பிளை கிடைத்ததால்தான் என்னைத் தூக்கி எரிந்திருக்கிறாள். இந்தப் பெண்களே இப்படித்தான். இதுல அவருக்கு துரோகம் பண்ண விருப்பம் இல்லியாம், என்கூட ஊர் சுத்தும்போது தெரியலியாம். ச்சீ நீ எல்லாம் பொம்பளையா. அவள் எனக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, அந்த அப்பாவியையும் ஏமாத்தப் போகிறாளே.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பைத் தாங்கமுடியாமல் பொள்ளாச்சிக்கு கிளம்பினேன்.
சக்தி ஹோட்டலில் ராத்திரி 12 மணிக்கு ஆல்வினை பார்த்துப் பேசினேன். நாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள், அவள் எனக்கு அனுப்பிய மெசேஜ்கள் எல்லாவற்றையும் அவரிடம் காண்பித்துவிட்டு கடைசியாக, 'சார், உங்க நல்ல மனசுக்கு இவளைவிட நல்ல பொண்ணு கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
ராத்திரியே மடத்துக்குளம் திரும்பப் போய்விட்டேன். அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினேன்.
காலை தங்கையிடம் இருந்து ஃபோன் , "அண்ணா, அந்த அக்கா எறந்திருச்சுண்ணா. கல்யாணத்துல இஷ்டம் இல்லாம தற்கொலை பண்ணிக்கிச்சுண்ணா.
அந்த அக்கா எறந்ததுக்கு நம்ம அப்பாவும் அம்மாவும்தான் காரணம். அண்ணா, நீ
எதுவும் பண்ணிக்காதண்ணா. எங்களுக்கு உன்ன விட்டா யாரும் இல்லைண்ணா' என்றார் அழுதுகொண்டே...
********************
பிகு: பல
ஆண்கள் இதுபோன்ற சமயங்களில் நிலைதடுமாறி இப்படி பழிவாங்கும் எண்ணத்தில்
செயல்பட்டு காதலித்தவளின் வாழ்க்கையைக் கெடுத்து, தமது நிம்மதியையும்
இழந்துவிடுகிறார்கள். விட்டுக்கொடுத்திருந்தால் வாழ்நாள் முழுவதும்
பெருமிதத்தோடு இருக்கலாம் என்பதை அவர்களால் அந்தத் தருணத்தில் உணரமுடிவதில்லை