இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கப் போகுதுன்னு தெரியாம, வழக்கம் போல
ஆஃபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். வந்த உடனேயே ஆரம்பிச்சாச்சு
'ஏங்க , நம்ம அன்னைக்கு மலபார் கோல்ட்ல ஒரு Antique necklace பாத்தோம் இல்லையா, அது நல்லா இருந்துச்சு இல்லீங்களா'
'எப்ப? எனக்கு ஞாபகம் இல்லியே' என்று பொய் சொன்னேன். (அதை எப்படி மறக்கமுடியும், அது வெலையப் பாத்து மயக்கமே வந்திருச்சே எனக்கு)
'இல்லீங்க, போன வாரம் துபாய்ல பாக்கல'
'ஹ்ம், ஆனா அது நல்லா இல்ல. யூஸ் பண்ணுன மாதிரி இருந்துச்சே'
'அது மாடலே அப்படித்தாங்க. அதுதான் இப்ப ஃபேஷன் '
'உனக்கே தெரியும், நம்ம ரெண்டாவது பொண்ணுக்கு வேற நகை சேர்க்கணும். நீ தேவையில்லாம அத இத வாங்க சொல்லாத'
'ஓ எனக்கு வாங்கறது தேவையில்லாதது'
'அப்படி சொல்லல, இப்பத்தான உன் பிறந்த நாளுக்கு கழுத்தோட ஒட்டி இருக்கற மாதிரி ஒரு செயின் வாங்குனோம்'
'கணக்கு சொல்றீங்களா. நானும் கணக்கு சொல்லட்டா'
'ச்சே, என்ன சொன்னாலும் அதுல குற்றம் கண்டுபிடிச்சா என்ன பண்றது'
'எங்க அப்பா, இதுவரைக்கும் நாங்க கேட்டு எதுவும் வாங்கி தரமா இருந்ததில்ல'
சரி இதுக்குமேல பேசுனா பிரச்சனை பெருசாயிரும். அப்புறம் எப்படியும் நகை ரெண்டு நாளைக்குள்ள வங்கிக் குடுக்க வேண்டி வரும். அடக்க நினைக்கறத விட அடங்கிப் போறதுதான் வீரனுக்கு அழகு (இது யார் சொன்னா?). சரண்டர் ஆயிறலாம்னு முடிவு பண்ணீட்டேன்.
'சரி, மூணு மாசம் டைம் குடும்மா. கண்டிப்பா வாங்கித் தர்றேன்'
'சாப்பாடு ஒன்னும் செய்யல'
'இன்னைக்கு நான் சமைக்கட்டா'
'ஓ. ஐஸ் வெக்கறீங்களா?'
'இல்ல, நான் சமைச்சு ரொம்ப நாள் ஆச்சே'
'ஹ்ம்'
பொதுவா பெண்களை ஏமாற்றுவது ரொம்ப சுலபம். அவங்க சொல்லும் போது உடனே முடியாதுன்னு சொல்லக்கூடாது. சரின்னு சொல்லிட்டு அப்புறமா ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கலாம்.
ஓகே. மேட்டருக்கு வருவோம். என்ன சமைக்கலாம்னு யோசிச்சேன். முட்டைக் குழம்பு அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வழக்கமா வைக்குற மாதிரி வைக்காம புதுசா முயற்சி பண்ணலாம்னு முடிவு பண்ணுனேன். அறுசுவை டாட் காம் போய் தேடிப் பாத்தா முட்டைக் குழம்புக்கு மட்டுமே பத்து பதனஞ்சு குறிப்புகள் இருந்தது.
ஒரு குறிப்புக்கு அதிகமா 35 கமெண்ட்கள் விழுந்திருந்தன. சோ அதையே செலக்ட் பண்ணீட்டேன். அருமையா படத்தோட செய்முறைகளை சொல்லியிருந்தார் அந்தக் குறிப்பை வழங்கியவர்.
தேவையானவற்றை எடுத்தபோது ஒரு சிக்கல். லவங்கம்னா என்னன்னு தெரியல. google image search பண்ணினால், ஒவ்வொரு imageலயும் ஒவ்வொரு விதமா இருக்குதே. இங்கி பிங்கி பாங்கி போட்டு ஒன்ன எடுத்துக்கிட்டேன்.
அவங்க சொல்லிருந்த மாதியே செஞ்சிட்டு இருந்தேன். அடுத்த பிரச்சனை கருவேப்பிலை எப்ப சேர்க்கணும்னு எழுதல. என்ன பண்றது? அதுதான் 35 கமெண்ட்ஸ் இருக்கே, யாராவது இதப் பத்தி கேட்டிருக்கமாட்டங்களா. கமெண்ட்ஸைப் படித்தேன்.
கமெண்ட் 1: அக்கா அருமையா எழுதிருக்கீங்க. எங்க அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க. செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு சொல்றேன்.
கமெண்ட் 2: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
கமெண்ட் 3: செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க
கமெண்ட் 4: உங்க அம்மாவுக்கு எந்த ஊர்
கமெண்ட் 5: நாகர் கோவிலா? அங்கதான் பொதுவா இந்த முறைல செய்வாங்க.
அடக் கடவுளே இப்பத்தான புரியுது எப்படி 35 கமெண்ட்ஸ் வந்துச்சுன்னு. ஆனாப் பாருங்க யாருமே கருவேப்பிலை பத்தி சொல்லல, செஞ்சு பாத்ததுக்கு அப்புறமா யாரும் கமெண்ட் போட்ட மாதிரியும் இல்ல.
செந்தில் மாதிரி ஆளுங்க, ஏதாவது எழுத்தாளர் தும்முனாக்கூட அதுல உள்ள மிஸ்டேக் கண்டு பிடிச்சு நாலு நாளைக்கு திட்டுவாங்க. இது மாதிரி பிழைகளை கண்டுபிடிக்க அவருக்கு டைம் இல்ல பாருங்க. சமூக அக்கறை எனபது கொஞ்சம் கூட இல்லியே. சரி, கருவேப்பில்லையை சாய்ஸ்ல விட்டுட்டேன்.
ஒரு வழியா குழம்பு கொதிக்க ஆரம்பிச்சது. நல்ல மணம். சுவையாவும் இருந்துச்சு. பொதுவா எனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு. இந்த உண்மை எனக்கு என் மனைவி சொல்லித்தான் தெரியும். அதேமாதிரி, நான் மாவு அரைச்சா நல்லா பொங்கி வரும். இதுவும் அவங்க தான் சொன்னாங்க.
குழம்பு இனியும் அஞ்சு நிமிஷம் கொதிக்கவிடலாம்னு விட்டுட்டேன். கிச்சன்ல அப்படியே கைய பின்னாடி கட்டிட்டு அந்நியன் படத்துல லெட்டெர் கொடுத்துட்டு அம்பி நடக்கிற மாதிரி நடந்துகிட்டே பின்வருவனவற்றை யோசிச்சேன்.
இப்படியே போச்சுன்னா இன்னும் ரெண்டு வருஷத்துல மனைவியை சமாளிப்பது எப்படின்னு ஒரு புக் எதுலாம் போலிருக்கே. உமா மகேஸ்வரன், தேன், ப்ரவின் போன்றோர் கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு அதைப் படித்து பயனடைவார்கள்.
குழம்பு கொதித்தவுடன் அதை எடுத்து வைத்துவிட்டு ஹாலிற்கு சென்று மனைவிக்கு அருகில் அமர்ந்தேன். உக்காந்த உடனேயே அவங்களுக்கு காமுகிட்ட இருந்து ஃபோன் வந்துச்சு.
'சொல்லு காமு'
'யாருடி இன்னைக்கு சமைச்சா?' (எனக்கும் நல்லாவே கேட்டுச்சு)
'அவருதான் இன்னைக்கு சமையல். நல்லா சமைப்பார்டி' (இவங்களா சொல்ற மாதிரி ஒரு பில்ட்-அப்)
'எப்படிடி அண்ணனை ஏமாத்தி சமைக்க வெச்ச'
இவங்க எந்திருச்சு பெட்ரூம் போயி, 'அவரு Antique necklace வாங்கித் தர்றேன்னு சொல்லிருக்கார்டி' என்றார்
ஏம்பா, யாரவாது பொண்டாட்டிகிட்ட ஏமாறாமல் இருப்பது எப்படிங்கற புக் இருந்தா வாங்கி அனுப்புங்கப்பா.
'ஏங்க , நம்ம அன்னைக்கு மலபார் கோல்ட்ல ஒரு Antique necklace பாத்தோம் இல்லையா, அது நல்லா இருந்துச்சு இல்லீங்களா'
'எப்ப? எனக்கு ஞாபகம் இல்லியே' என்று பொய் சொன்னேன். (அதை எப்படி மறக்கமுடியும், அது வெலையப் பாத்து மயக்கமே வந்திருச்சே எனக்கு)
'இல்லீங்க, போன வாரம் துபாய்ல பாக்கல'
'ஹ்ம், ஆனா அது நல்லா இல்ல. யூஸ் பண்ணுன மாதிரி இருந்துச்சே'
'அது மாடலே அப்படித்தாங்க. அதுதான் இப்ப ஃபேஷன் '
'உனக்கே தெரியும், நம்ம ரெண்டாவது பொண்ணுக்கு வேற நகை சேர்க்கணும். நீ தேவையில்லாம அத இத வாங்க சொல்லாத'
'ஓ எனக்கு வாங்கறது தேவையில்லாதது'
'அப்படி சொல்லல, இப்பத்தான உன் பிறந்த நாளுக்கு கழுத்தோட ஒட்டி இருக்கற மாதிரி ஒரு செயின் வாங்குனோம்'
'கணக்கு சொல்றீங்களா. நானும் கணக்கு சொல்லட்டா'
'ச்சே, என்ன சொன்னாலும் அதுல குற்றம் கண்டுபிடிச்சா என்ன பண்றது'
'எங்க அப்பா, இதுவரைக்கும் நாங்க கேட்டு எதுவும் வாங்கி தரமா இருந்ததில்ல'
சரி இதுக்குமேல பேசுனா பிரச்சனை பெருசாயிரும். அப்புறம் எப்படியும் நகை ரெண்டு நாளைக்குள்ள வங்கிக் குடுக்க வேண்டி வரும். அடக்க நினைக்கறத விட அடங்கிப் போறதுதான் வீரனுக்கு அழகு (இது யார் சொன்னா?). சரண்டர் ஆயிறலாம்னு முடிவு பண்ணீட்டேன்.
'சரி, மூணு மாசம் டைம் குடும்மா. கண்டிப்பா வாங்கித் தர்றேன்'
'சாப்பாடு ஒன்னும் செய்யல'
'இன்னைக்கு நான் சமைக்கட்டா'
'ஓ. ஐஸ் வெக்கறீங்களா?'
'இல்ல, நான் சமைச்சு ரொம்ப நாள் ஆச்சே'
'ஹ்ம்'
பொதுவா பெண்களை ஏமாற்றுவது ரொம்ப சுலபம். அவங்க சொல்லும் போது உடனே முடியாதுன்னு சொல்லக்கூடாது. சரின்னு சொல்லிட்டு அப்புறமா ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கலாம்.
ஓகே. மேட்டருக்கு வருவோம். என்ன சமைக்கலாம்னு யோசிச்சேன். முட்டைக் குழம்பு அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வழக்கமா வைக்குற மாதிரி வைக்காம புதுசா முயற்சி பண்ணலாம்னு முடிவு பண்ணுனேன். அறுசுவை டாட் காம் போய் தேடிப் பாத்தா முட்டைக் குழம்புக்கு மட்டுமே பத்து பதனஞ்சு குறிப்புகள் இருந்தது.
ஒரு குறிப்புக்கு அதிகமா 35 கமெண்ட்கள் விழுந்திருந்தன. சோ அதையே செலக்ட் பண்ணீட்டேன். அருமையா படத்தோட செய்முறைகளை சொல்லியிருந்தார் அந்தக் குறிப்பை வழங்கியவர்.
தேவையானவற்றை எடுத்தபோது ஒரு சிக்கல். லவங்கம்னா என்னன்னு தெரியல. google image search பண்ணினால், ஒவ்வொரு imageலயும் ஒவ்வொரு விதமா இருக்குதே. இங்கி பிங்கி பாங்கி போட்டு ஒன்ன எடுத்துக்கிட்டேன்.
அவங்க சொல்லிருந்த மாதியே செஞ்சிட்டு இருந்தேன். அடுத்த பிரச்சனை கருவேப்பிலை எப்ப சேர்க்கணும்னு எழுதல. என்ன பண்றது? அதுதான் 35 கமெண்ட்ஸ் இருக்கே, யாராவது இதப் பத்தி கேட்டிருக்கமாட்டங்களா. கமெண்ட்ஸைப் படித்தேன்.
கமெண்ட் 1: அக்கா அருமையா எழுதிருக்கீங்க. எங்க அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க. செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு சொல்றேன்.
கமெண்ட் 2: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
கமெண்ட் 3: செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க
கமெண்ட் 4: உங்க அம்மாவுக்கு எந்த ஊர்
கமெண்ட் 5: நாகர் கோவிலா? அங்கதான் பொதுவா இந்த முறைல செய்வாங்க.
அடக் கடவுளே இப்பத்தான புரியுது எப்படி 35 கமெண்ட்ஸ் வந்துச்சுன்னு. ஆனாப் பாருங்க யாருமே கருவேப்பிலை பத்தி சொல்லல, செஞ்சு பாத்ததுக்கு அப்புறமா யாரும் கமெண்ட் போட்ட மாதிரியும் இல்ல.
செந்தில் மாதிரி ஆளுங்க, ஏதாவது எழுத்தாளர் தும்முனாக்கூட அதுல உள்ள மிஸ்டேக் கண்டு பிடிச்சு நாலு நாளைக்கு திட்டுவாங்க. இது மாதிரி பிழைகளை கண்டுபிடிக்க அவருக்கு டைம் இல்ல பாருங்க. சமூக அக்கறை எனபது கொஞ்சம் கூட இல்லியே. சரி, கருவேப்பில்லையை சாய்ஸ்ல விட்டுட்டேன்.
ஒரு வழியா குழம்பு கொதிக்க ஆரம்பிச்சது. நல்ல மணம். சுவையாவும் இருந்துச்சு. பொதுவா எனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு. இந்த உண்மை எனக்கு என் மனைவி சொல்லித்தான் தெரியும். அதேமாதிரி, நான் மாவு அரைச்சா நல்லா பொங்கி வரும். இதுவும் அவங்க தான் சொன்னாங்க.
குழம்பு இனியும் அஞ்சு நிமிஷம் கொதிக்கவிடலாம்னு விட்டுட்டேன். கிச்சன்ல அப்படியே கைய பின்னாடி கட்டிட்டு அந்நியன் படத்துல லெட்டெர் கொடுத்துட்டு அம்பி நடக்கிற மாதிரி நடந்துகிட்டே பின்வருவனவற்றை யோசிச்சேன்.
இப்படியே போச்சுன்னா இன்னும் ரெண்டு வருஷத்துல மனைவியை சமாளிப்பது எப்படின்னு ஒரு புக் எதுலாம் போலிருக்கே. உமா மகேஸ்வரன், தேன், ப்ரவின் போன்றோர் கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு அதைப் படித்து பயனடைவார்கள்.
குழம்பு கொதித்தவுடன் அதை எடுத்து வைத்துவிட்டு ஹாலிற்கு சென்று மனைவிக்கு அருகில் அமர்ந்தேன். உக்காந்த உடனேயே அவங்களுக்கு காமுகிட்ட இருந்து ஃபோன் வந்துச்சு.
'சொல்லு காமு'
'யாருடி இன்னைக்கு சமைச்சா?' (எனக்கும் நல்லாவே கேட்டுச்சு)
'அவருதான் இன்னைக்கு சமையல். நல்லா சமைப்பார்டி' (இவங்களா சொல்ற மாதிரி ஒரு பில்ட்-அப்)
'எப்படிடி அண்ணனை ஏமாத்தி சமைக்க வெச்ச'
இவங்க எந்திருச்சு பெட்ரூம் போயி, 'அவரு Antique necklace வாங்கித் தர்றேன்னு சொல்லிருக்கார்டி' என்றார்
ஏம்பா, யாரவாது பொண்டாட்டிகிட்ட ஏமாறாமல் இருப்பது எப்படிங்கற புக் இருந்தா வாங்கி அனுப்புங்கப்பா.
Sontha experienceaaaaaa?
ReplyDelete